வெள்ளி, 31 அக்டோபர், 2008
கிறுக்கல்கள்
பேனா சிரிக்குமோ?மூன்றாம் வகுப்பில்முதன் முதலாகபேனா பிடித்தேன்.பிஞ்சு விரலால் எழுதிய முதல்பேனா இன்றும் பொக்கிஷமாய்.இன்றும் ஒவ்வொரு முறை திறக்கும் போதும், மை இல்லாமல் தவித்த நான்காம் வகுப்புஅரையாண்டுத் தேர்வில்ஏற்பட்ட பயம் லேசாய் இதழோரம் சிரிப்பு மூட்டிச் செல்லும். புதுசாய் எத்தனை பேனா வந்தாலும் ஏப்ரல் ஒண்ணாந் தேதி மை தெளிக்கஉபயோகிப்பதற்காகவே முதல் பேனா பாதுகாக்கப்பட்டது. பத்தாம் வகுப்பு பரீட்சையில்மை தீர்ந்து போனால் ஊற்றிக் கொள்ள மை குடித்து குட்டி மை புட்டியாககூட வந்தது. கட்டுக் கட்டாய் காகிதம் தின்னக்கொடுத்து சொட்டுச் சொட்டாய் மை வண்ணங்கள் ஊற்றி எழுதியஎன் பேனா ஒரு நாளும் என் எண்ணங்களை ஊற்றி எழுதாததைஎண்ணி ஏளனமாய் சிரிக்குமோ?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக