சனி, 8 நவம்பர், 2008

***சொர்க்கம்***






சொர்க்கம் என்பது எங்கே

உள்ளதுசொலவா முடியாது

நற்கருணையுடன் மானுடம் நடந்தால்

நமைவிட மேல் ஏது
மண்ணில் தெரியுது சொர்க்கம் காண வாங்க

கண்ணில் தெரியும் காட்சியை விட்டுக்

கதைகள் ஏன் போங்க
பகைவனை மோதிச் சுட்டுவி டாமல்

பாசம் பொழியுங்க

புகைச்சல் மறந்து புறப்பட்டு வாங்க

போரை அழியுங்க
எல்லா மனிதரும் ஏவாள் பிள்ளை

என்றால் ஏன் சண்டை

வல்லான் இல்லான் என்றில்லாமல்

வசிப்போம் ஊராண்டை
காலையிற் பகைவனைத் தியானம் செய்க

காதலில் ஆழ்ந்திடுக

மாலையில் அவனே மயங்கிச் சிரிப்பான்

மனம்போல் வாழ்ந்திடுக
உர்ரென மூஞ்சியை வைக்க தீங்க

உடனே சிரியுங்க

விர்என வெளியே வாங்க அங்கே

விண்ணைப் பிடியுங்க
சண்டை களுக்குள் நேரம் தொலையுது

சவத்தைத் தள்ளுங்க

அண்டை களுக்குள் அன்பைத் தெளிங்க

அனுபவம் கொள்ளுங்க
மனிதர்எல் லோரும் மனுவின் பிள்ளை

மறுபடி ஏன் சண்டை

பனிமனி தர்முதல் புனிதர்க ளோடு

பழகுக வீட்டாண்டை
புத்தன் ஏசு போதித் தார்கள்

போற்றுக நற்றொண்டை

நித்தம் நித்தம் முழக்குக முழக்கி

நெகிழுக நம் தொண்டை
நாம் எல்லோரும் நபியின் பிள்ளை

நமக்குள் ஏன் சண்டை

பூமியிற் போர்கள் முடிந்தன முடிந்தன

போனது நாள் பண்டை
மானுட சக்தியின் மகத்துவம் கேட்க

மக்காள் வாருங்க

தேனிடம் இனிமை கேளுங்க கொட்டும்

தேளிடம் ஏனுங்க
அலுவல கத்தில் பாஸ்மேல் கொஞ்சம்

அன்பைத் தெளியுங்க

கலகலப் பாகப் பேசுங்க சிரிப்பில்

காதலைப் பிழியுங்க
குழந்தைகள் டீவியைக் காதலித் தால்அக்

குற்றம் உமதுங்க

வழிந்தே பாசம் பொழிந்தால் அந்த

வகையும் உமதுங்க
கவனம் கண்ணை மூடுங்க உள்ளக்

கதவைத் திறவுங்க

நவநவமான உலகம் உமக்கே

நட்பாய்ப் பரவுங்க
மனைவியின் முகத்தை பிடியுங்க அவளை

மனம் போல் சுத்துங்க

கனிவாள் உமையே கவனிப் பாள் எனில்

கவலைகள்

1 கருத்து:

மாதவராஜ் சொன்னது…

விஜய்!

சின்னச் சின்ன தூறல்களாய் போல இருக்கிறது.
சமூகம் குறித்த அக்கறைகள் தெரிகின்றன.
வாழ்த்துக்கள்.